Saturday, December 19, 2009

எங்கிருந்து வந்தேன்



எங்கிருந்து வந்தேன் தெரியவில்லை
வந்துவிட்டேன்
எனக்கு முன் கால்தடங்களிருந்தது
தொடர்ந்து விட்டேன்
நடந்துகொண்டேயிருப்பேன்
இந்த பாதை எனக்கானதா...

இந்த புவியில் நான் புதியவனா
அல்ல மீண்டும் பிறந்தவனா
எனக்கு சுதந்திரமுண்டா அல்ல
கட்டுப்பாடுகள் உண்டா
என் கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும்
சங்கிலி யார் கைகளில் உள்ளது...

எனது பாதை நீண்ட தூரமானதா
அல்ல சிறிய தூரமானதா
நான் போய்கொண்டிருக்கிறேனா
அல்ல வந்துகொண்டா
நான் நடக்கிறேனா
அல்ல பாதை நகர்ந்து கொண்டிருக்கிறதா
அல்ல இருவரும் நின்றுகொண்டு
காலம் நகர்ந்து கொண்டிருக்கிறதா...

நான் மனிதனாக மறுவதற்க்கு முன்
நீங்கள் என்னை பார்தீர்களா
நான் சூன்யமா அல்லது ஏதாவதா
என்னுடைய கேள்வி உங்களுக்கான
விடையா அல்லது உங்களுக்கான
கோடிட்ட இடங்களில்
என் கேள்விகள் விடைகளாக
நிறப்பப்பட்டுள்ளதா

வெறுமையான காகிதத்தை
நிறப்புவதற்க்கு விடைகளற்ற
கேள்விகளோடு நான்...

Wednesday, November 25, 2009

நான், என் நண்பர்கள், துரோகம் ...



அவர்கள் என் நண்பர்கள் இன்னமும் நண்பர்களே
ஆனால் அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்
கொலைசெய்யும் அளவிற்க்கு
என் நண்பனாய் இருந்ததற்க்கு வருந்தினர்
நான் மெலிந்து இறுதிக்கு தவழ்ந்து செல்கிறேன்
ஆழ்மனதில் என் இதயத் துடிப்பு எனக்கு கேட்கிறது
உறக்கமின்றி நான் துவக்கமின்றி முடிக்கிறேன்
பார்வை மங்கியது இருளாய்
லேசான வலி இதயத்தில்
நான் வீழ்ந்ததில் என்னிடம் சண்டையிட ஆயித்தமாயினர்
மூலையில் மாட்டிக்கொண்டேன் என்னை மிதித்தனர்
குருதி கொட்டும்வரை அடித்தனர்

எனக்கெதிராக அனைவரும்
என் தசைகளை தின்றனர்
வசைசொற்களை ஏவினர்
என்னை சபித்தனர் வார்த்தைகள் என்னை துளையிட்டது
கிழிந்தவனாய் தரையில் நொறுங்கியே
ஓடி ஒளிந்தேன் முடிவென்று நினைத்தேன்
இன்னமும் தேடினர் சண்டையிட்டனர்
என் மிகசிறந்த நண்பர்கள்

என் குரல் கிழிந்து கத்துவதை
ஒருவரும் கேட்கவில்லை
என்னுள் நான் எரிந்து கிடப்பதையும்
என் தசைகள் உரிந்து குருதி வழிவதையும்
என்னைத் தவறாய்ப் புரிந்தவர்கள் என் நண்பர்கள்

என் வெற்றிடத்தில் வெறுப்பினை நிரப்பி
அனைவரும் நகர்ந்தனர்
என்னை நினைப்பர்

என்னை உற்று பாருங்கள் என்னுள் பாருங்கள்
நான் நஞ்சு அவர்களுக்கான விஷம் தொய்ந்த கத்தி

என் இதயத்தை இன்னமும் திறந்தே வைத்திருக்கிறேன்
அவர்கள் மீண்டும் மிதிப்பதற்காக காத்துக்கிடக்கிறேன்

என் கண்களில் வழியும் கண்ணீர் எனதன்று
அவர்கள் ருசிக்கும் அழுகிய திரட்சை ரசம்
நான் அவர்களுக்கான கண்ணிர் துடைக்கும்
விலையுயர்ந்த கைகுட்டை
நான் அவர்களுக்கான குரல்
அதை நான் மட்டுமே கேட்பேன்
என் அழுகைக்காக காத்துநின்றனர்
நான் மரிப்பேனென்று நினைத்தனர் மகிழ்ந்தனர்
அவர்களின் துற்நாற்றத்தை நான் சுவாசித்தே கிடக்கிறேன்
எல்லாம் முடிந்தது
நன்றி நண்பர்களே
உங்களின் பாதங்களின் அடியில் என் சிரசின் மொத்தம்...


சந்திரா அக்காவிற்காக ...

Tuesday, November 24, 2009

முகமூடி அணிந்து கொண்டே



அந்த நீண்ட கருமையான தனிமையில்
நான் என்னிடம் கேட்பது
இன்னும் எத்தனை நாள்
இப்படி போகுமென்று

நான் கடுமையான முகமூடி அணிந்து கொள்கிறேனா
என்னிடமே போலியாய் வாழ்வதற்கு
அல்ல உண்மையில் நான் பிழைத்துகொண்டேனா
வாழ்வதற்கு தகுதியற்ற நாட்களுக்காக

எனக்கும் ஆன்மா உண்டு
எழிச்சியான அலைகளில் மிதந்து கொண்டு
அந்த தீவை அடைவதற்கு
அங்கு எப்போதும் வசிப்பதற்கு

நான் யாரென்று எனக்குத்தெரியாது
எனக்குத்தெரிந்ததெல்லாம் யோசிக்காமல்
இருப்பது எப்படி என்று
என் நிலையில் வருந்தாமல்
எப்போது சிரிக்கவே நான் விரும்புகிறேன்

நான் மேல்நோக்கியே எழுகிறேன்
என் பாதையை அப்படியே அமைக்கிறேன்
வாழ்வுக்கான கேள்வியை நான் வெறுக்கிறேன்
காரணம் நான் அழுவதையும் என்னால் ஏற்க முடியாது

என்னுடைய தனிமையான பொழுதுகளில்
நான் சிரிக்கவே செய்கிறேன் ஏனென்றால்
நான் என்னிடமே இருக்கிறேன்
முடிவில் அதுவும் எனக்கு போதவில்லை...

Sunday, November 22, 2009

நான் யாரோ ...



நான் யாரோ
உயிருள்ள போலி மனிதர்களை
கடந்து செல்கிறேன்

என் கண்களை
அந்த கண்ணாடியில் பார்த்து அழுகிறேன்

அதில் எனக்கு தெரியாத
ஒருவரை பார்கிறேன் ஆனால்
ஒரு நண்பனை சந்திக்கிறேன்

அதை கடக்கையில் திரும்பிப்பார்க்க
எனக்கு தலையிருக்கிறது இப்போது

அவனை தொலைக்கையில் நான்
என்னை பற்றி தெரிந்து கொண்டேன்

காதலை பற்றி நினைக்கையில்
பலத்த காயங்களுடன் தவித்தேன்

நான் மீண்டும் அந்த வட்டத்துக்குள்

பாறைகள் மிகுந்த மலைமீது நான்

கழுகுகள் என் தலைமீது வட்டமிடுகிறது

என்னை பற்றிய அவதூருகளை கேட்கிறேன்
நான் இருப்பது அறியாது புலம்பியவர்களிடமிருந்து

என்னை தாக்கியும் நான் அழாததை கண்டு
நான் பலமாயிருப்பதை உணர்கிறேன்

நான் யாரென்று தெரிந்துகொண்டேன்
நான் யாரோஒருவரில் இருக்கையில்

நானும் தொலைந்துத்தான் போயிருந்தேன்
என் நண்பன் என்னை கண்டறியும்வரை

என் வாழ்க்கை என் கைகளில்
அதை இறுக்கமாய் பிடித்திருக்கிறேன்

அடகு வைக்கப்பட்டவனாய் நான்
சரணடைகிறேன் அவரில்

போரட்டங்களின் இடைவெளியில் நடக்கிறேன்
போராட்டங்களை வெறுக்கிறேன்

நான் நானே இன்னமும்
நான் யாரோ ...

Thursday, November 19, 2009

என்னுள்



அமைதி என் அறை வழியே நகர்ந்து
என்னை அங்கேயே நிலைக்க செய்கிறது
முன்னும் பின்னுமாய் அலறல் ஒலித்தே
அந்த அறைக்குள் தாவிக்கொண்டே இருந்தது
என்னுடைய முனுமுனுப்பு உங்களுக்கு
கேட்கிறதா என்று தவித்துத்தான் போகிறேன்

என் தலைக்குள் இருக்கும் சிறையிலிருந்து தப்பிக்க
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறேன்
என் சுய நோய்க்குள் நானே சிக்கித்தவிக்கிறேன்
இந்த புவியோடு என்னை இணைக்கும்
அந்த கயிற்றை தேடுகிறேன்
இந்த அண்டம் இன்னும் பழுப்புநிற கார் மேகமாய்
இன்னும் மங்கலாய் ஒரு புள்ளியும் தெரியாமல்

இந்த மனிதநேயம் எங்கு சென்றது
நான் ஏன் அதை பின் தொடரவில்லை

என்னுள் இருக்கும் மிருகத்திடமே
இறையாகிறேன்

நீ என்னுடைய படைப்பு
கொடும் மூர்க்கமான படைப்பு
என்னுடைய அங்கம்
நீ என் இதயத்தில்
மெல்லமாய் துலையிட்டு நுழைந்துவிட்டாய்
இப்பொது என்னுள் நீ
தூய்மையற்றவனாய் நான்

உன் வார்த்தைகள் என்னை
பிணங்களின் மீதியை தின்னும் வல்லூராய் மாற்றியது
உன் கரும் கண்களின் சந்திப்பில்
மீண்டும் மீண்டும் மரிப்பதற்காகவே
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நீ என்னிடமிருந்து மிக சிறந்த ஒன்றை
உனக்காக எடுத்துக்கொண்டாய்

நீ என் இதயத்தை எடுத்துக்கொண்டாய்
அதை திருப்பிக்கொடு

என் நுண்ணிய உயிரணுக்களையும்
சேகரிக்கிறேன் அவைகளை அந்த பறவையின்
காலில் கட்டிவிடபோகிறேன்
எனதான்மா சொர்க்கத்தை அடைய அதுவே
சிறந்த வழி
இதிலிருந்து மீட்சி எனக்கு கிடையாது
எனக்கான இந்த வாழ்வு விதிவிலக்கல்ல
நான் இதழ்களற்ற ரோஜா
கொடும்மிருகம்


என்னுடைய சாம்பல் என்னை சுற்றியே
நான் மறக்கப்பட்டவனாய்
உங்களிடமிருந்து தொலைந்தவனாய்...

Sunday, November 15, 2009

மூர்க்கமான சூழ்ச்சி




குழப்பமான சூழ்ச்சியை உற்றுப்பார்
வானில் அவைகளை பார்
பார்க்கமுடிகிறதா
மேகங்கள் எப்படி அழுகிறது என்று பார்
அவைகளின் வலியையும் தனிமையும்
உன்னால் உணரமுடிகிறதா
அவைகளின் தனிமையை
பகிர்ந்து கொள்

கணிக்க முடியாத மூர்க்கமான சூழ்ச்சி
யாரையும் விட்டுவைக்காது
அதை கடந்து செல்வது கடினம்

அது மழையாய் தூறி வெள்ளமாய்
இந்த அண்டத்தை முழுமையாய்
நனைத்தே எங்கும் பரவி
சூழ்ச்சியின் மழை பிரமாண்ட மிருகமாய்
மறைந்த கரும் நிலத்தையும்
துறத்தி வேட்டையாடும்

மூர்க்கமாய் உழுத செந்நிற ரோஜா செடியும்
படர்ந்தகொடியும் வானை முட்டியே

அந்த செந்நிற ரோஜாவை பார்
குருதியின் தூரலில் குளிப்பதை
அவை வேகமாய் மலர்வதை பார்
உனக்கது தீர்ப்பிடுவதைப்பார்

அந்த கொடியால் நறுமனத்தோடு
அழகாய் நெய்யப்பட்ட
சூழ்ச்சிமிருகத்தின் பிரமாண்ட கூடு

அந்த மிருகத்தின் பற்கள் கூர்மையாய்
உன் தசைகளை கிழித்து இழுப்பதற்க்கு
உன் தேகம் எங்கும் வலியை நிரப்பும்
உன் கைகளை அது உடைத்து முறிக்கும்
உன் குருதியினை உறையவிட்டு செல்லும்
உன் வாழ்வை அது ஆதரமற்றதாய் மாற்றும்
உன் அடையாளங்களை அது அழிக்கும்

பயத்தின் கூட்டில் வசிக்காதே
சுதந்திரமாய் நட

வாழ்வை விட்டுக்கொடு மரித்துவிடு
மரணம் உனக்கு நண்பன்
அதனிடம் வெட்கப்படாதே
அண்டம் ஒலிக்க கூச்சலிடு
உன் கடைசி கண்ணீர் முடியும்வரை அழு
கடைசியாய் அதனிடம் கேள் ஏன் என்று

இறுதியாய் நீ அழுகியே மீண்டும் மண்ணுக்கே
அதுவும் தற்காலிக வசிப்பிடமாய்

வாழ்க்கையை சூழ்ச்சியை
அந்த பூமிக்கும் அடியிலிருந்து உற்றுப்பார்
அந்த ரோஜாக்களுக்கும் கொடிகளுக்கும் உரமாகு
அவைகள் உன்னை காப்பாற்றினால் காப்பாற்றும்
தற்காலிக மரணத்தில் நீ
இந்த உலக தாயின் அடிமடியில்...

Sunday, November 8, 2009

சொர்க்கத்தின் தோட்டத்திலிருந்து வீழ்ந்தவள்




ஒரு அடர் இருள்

நான் குளம் ஒன்றை கடக்கிறேன்
அதில் தனிமையான நிலவொளியின்
ரீங்கார நடனம்

நீர் தேக்கம் நிலவொளியை குளிர் நடுக்கமுர
அவை வலைந்தும் நெலிந்தும்

அப்போது
தூரத்தில் ஒரு தனியான அடரொளி,
மெல்ல மங்கியதாய் இருளை கவ்வியே

ஒளியை நோக்கியே நான் பயணிக்கிறேன்

தேவதைகளின் கல்லறையில்
நான் நடந்து செல்கிறேன்

ஓர் அழகான தேவதை அழுதுகொண்டு

அவளுடைய இறக்கைகள் உடைந்தும்
கிழிந்தும் காயங்களுடன்
அழுவதற்க்கும் வலுவிழந்தவளாய்

அவள் அழகில் இந்த உலகம் நிச்சயம் மயங்கும்

சொர்க்கத்தின் தோட்டத்திலிருந்து வீழ்ந்தவளாய்.

அவளுடைய ஆன்மா துளி கண்ணீருடன்
அங்கு அவளை கான இயலாதவளாய் தொலைந்தவளாய்
சிதைந்த தேகத்தை வீழ்ந்த தேகத்தை
பாரமாய் நினைத்து
ஒரு அச்சத்துடன் விட்டு சீறிப்பாய தயாராய்

சில்லென வீசும் காற்றோடு கலக்க தயாராய்
அவள் படுத்திருந்த சலவைகல்லின் வெப்பம்
அவள் மரணத்தை சற்று தாமதிக்க

அவளுக்கு உதவ நான் முயன்று தோற்கிறேன்
என்னுடைய தாமதமான பயணம்
அவளுடைய வேகமான மரணத்தை
மீட்க முயலாது வெட்கி குனிகிறேன்

குருதியின் குளத்தில் என் கால்களை நனைக்க செய்த
அவளுக்கு காலம் வெண்சலவைகல்லில் மரண நாட்களை
குறித்துவைத்து என்னை சீண்டியது

ஒரு கனமும் அசைவின்றி
தன் கண்களால் என்னை பார்க்கிறாள்

அவள் இதயம் அழும் ஓசை
மெல்ல என் செவிகளுக்குள் ஒலிக்க துவங்கியது

செங்குருதியின் குளத்தில் வெண்தாமரையாய் அவள்
மிதந்து மௌனமாய்.
நுட்பமான மென்பொருளாய்
கூர்மையான கண்களோடு அவள் வின்னை நோக்கி.

என் கண்கள் நனைந்து
குரூரமாய் என் நாபிஉடைய
என் குரல் அவள் பிரபஞ்சத்தை அடைய கத்தினேன்

அடுத்து யார், நீதான் கடவுளே,
இந்த குளம் உன்னையும்
உன் பாதங்களையும் நனைக்கும்.
இந்த குருதியின் வாசம்
உன் இந்த அண்டம் எங்கும் வீசும்
சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரையும்
இது சென்றடையும்

மௌனமாய் அவளை
என் கைகளில் தூக்கி முத்தமிட்டு,
அன்பாய் நெருக்கமாய் அனைத்து
என் உடல் வெப்பம் அவள் மரண நடுக்கத்தை
குளிர்காய செய்து
அவள் காதுகளின் ஓரமாய்
மெல்லிய குரலில்
இந்த மூர்கமான கொலைக்காக
அவன் விரைவில் பதில் சொல்லுவான் பயம் வேண்டாம் அன்பே
என்று சொன்னபோது...

சிறைக்குள்ளிருந்து விடுவியுங்கள்



என் கூர்மையான
கத்திகளே என்னை
காதலியுங்கள்

என் தோலினை
கூறுபோட்டு அண்டம் ஒலிக்க
என்னை கூச்சலிட செய்யுங்கள்

ஆழமாய் பாய்ந்து
என்னை ஓலமிட்டு
விம்மி அழச்செய்யுங்கள்

என் தசைகளை
அறுத்து குருதியினை
வாரி இறைத்திடுங்கள்

இந்த பிரபஞ்ச சிறைக்குள்ளிருந்து
என்னை விடுவியுங்கள்...

பிரபஞ்சம் நோக்கி சாம்பலாய்



சில வார்த்தைகளில்
என் இதயம் கிழிக்கப்பட்டது
என் வலிகளில் இருந்து
தனிமையே பிறந்தது

பொய்களுக்கு பின்னிருந்து
என் வாழ்க்கை எட்டிப்பார்கிறது
கனவுகள் சிதைந்தும் சிதைத்தும்
நம்பிக்கை கண்களிழந்து

அன்பு மங்கியதாய்
சிதையெரிக்கப்பட்டு
எப்போதும் காணாத
பிரபஞ்சம் நோக்கி சாம்பலாய்

எது முன்பு அன்போ
அது இப்போது சாம்பலாய் காற்றில்
அந்த பொய்கள்
என் கண்களின் முன்னே

தீய்ந்த தசைகளுடன்
பொய்களின் விதைகளுக்கு
நீரூற்றியே காற்றில் கலந்து
கிழிப்பதற்க்கு இன்னொரு
இதயம் தேடி...

தனிமையான அந்த சாலையில்



என் சுமையான நினைவுகளை
தூக்கி தனிமையான கால்கள்
நீண்ட அந்த சாலையில்

யாருமற்று தூரத்து நீர்தேக்கமாய்
சாலையில்
புழுதியின் சுவாசம்
முதல் மழைதுளியை
நினைவுபடுத்தி
தனிமையான அந்த சாலையில்

எதற்காகவும் வருந்தாதவனாய்
இந்த கொடூர தேசத்து பிடியிலிருந்து
எங்கு அன்பு விதைக்கப்பட்டிருக்கிறதோ
அங்கு செல்ல
நான் அந்த சாலையில்

சுமையின் பாரம் என் எலும்புகளை
நொறுக்கி
ஒவ்வொரு நாளும் களைப்பாய்
நிற்கிறேன் சுமையுடன்
நான் அந்த சாலையில்

உன் செவி இந்த பூமியின்
சுழற்ச்சியில் இருந்தால்
உன்னோடு
என்னை அழைத்து செல்
எங்கே விதி எழுதப்படாதோ அங்கே...

Monday, November 2, 2009

உன்னை மறப்பது



உன்னை மறப்பது
என் வீட்டு கொல்லையில் எரியும்
விளக்கை அணைக்க மறந்தது போல
விடிந்தும் எரிந்தே கிடக்கும்

மீண்டும் விளக்கே
நினைவு படுத்தும்
எரிந்து கிடப்பதை...

Saturday, October 24, 2009

அவள் என்றால் அப்படி எனக்கு



இனிய கல்லாக
மறை பயத்துடன்
அவள் என்னை காதலித்தாள்
யாரும் அறியாமல்

பூட்டிய உணர்வுக்குள்
உருளாமல்
உறைந்த மௌனமாய்
துவக்கமும் முடிவுமின்றி
அகராதிக்குள் சிக்காமல்

அவள் இதயம் தங்கம்
அவள் மொழி இனிப்பு
என்னை குருடனாக்கிய
அழகான பேரொளி...

அன்பு மட்டுமே அனாதையாய்




ஒரு பிடி சோறும்
சிறு துளி நீரும்
கிடைக்காத என் தேசம்
விலைக்கு வாங்க
அன்பு மட்டுமே பிரம்மாண்டமாய்

தோலினை ஆடையாய்
தோல்வியை தோரணமாய்
ஏங்கிய விழிகளை
முதியோர் என கூறிடும்
அன்பு மட்டுமே முதுமையாய்

தரும் கைகளின்றி
பெரும் கைகள் இன்று
பெருகி பெருகி
ஏந்திய தேசமாய் கையேந்திய தேசமாய்
அன்பு மட்டுமே அங்குமிங்குமாய்

வீட்டிற்க்குள் கடல் வந்தாலும்
வீனர் நெஞ்சுக்குள் வந்தாலும்
அலை அலையாய்
சிலை மனதாய் சிற்பமாய்
அன்பு மட்டுமே அனாதையாய்...

நான் நானாய்




மெல்லிய தென்றலாய் அந்த மரத்தின்
கிளைகளின் இடைவெளியில் நுழைந்து
தேனீக்களின் இறக்கையாய் வேகமாய் சுற்றி
வயல்வெளி பூக்களாய் விதைக்காமல் வளர்ந்திடுவேன்
ஆனால் ஆழ்கடலின் அமைதியாய் இதை நிகழ்த்திடுவேன்

என்னுடைய சிரிப்பு சற்று பிரகாசமாய்
அன்பு சரியான அளவாய் இருக்கும்
என்னுடைய இந்த பயணம் குறித்து
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
அழுகிய திராட்சையின் வாடை என் வாழ்வில் வீசிய போதும்

உங்களுக்கான சராசரி ஆண் நான் கிடையாது
ஆடம்பரம் எனக்கு தெரியாது
அன்பும் சுயமரியாதையுமே என்னுடைய பேராசை
உன்மையாய் எப்பொழுதும் நடந்திடுவேன்

நான் நானாகவே இருக்கிறேன்
இளமையாய் கருப்பாய் அழகாய்
என் திறமையைய் முழுமையாய் காட்டுவேன்
என்னுடைய இயல்பை என்னால் மாற்ற இயலாது
அதற்காக நான் நானாய்...

வானம்..





கொட்டிய மழை வீதியில் அல்ல

என் வீட்டுக்குள் தேங்கியது

என் வீட்டுக்கு கூரை வானம் !!!!

சிவப்புவிளக்கு




உணர்விலா மனிதர்கள்
ஊர் முழுதும் பயணம்
ஊனமுற்ற நெஞ்சங்களின்
ஆடம்பர பவனி ஓய்வெடுக்க மின்னியது
சாலையோர சிவப்புவிளக்கு தண்ணீரும் விலைக்கு
தன்மானமும் விலைக்கு
கையில் குழந்தையும்
கண்ணில் கண்ணீரும் ஒரு கை நீட்டியபடி
நின்றாள் அவள்
யார் சொன்னது
சிவப்புவிளக்கு அபாயமென்று......

இரவில் எங்கோ ஓரிடத்தில்




இரவில் எங்கோ ஓரிடத்தில்

குழந்தையின் அழுகை
பெண்மையின் விசும்பல்
பெயர்தெரியாதவரின் மரணம்
மனிதநேயத்தின் கண்ணாமூச்சி

ஆன்மாவின் அலறல்
தூரத்து மனிதர்களின் பயணம்
கனவுக்குள் தொலைந்தவர்
உண்மையின் வாழ்க்கை

தனிமையின் இருப்பிடம்
அமைதியின் மறைவிடம்
அற்புதமான ஓய்வு


எங்கே ஒளி
இரவில் எங்கோ ஓரிடத்தில்...

Tuesday, October 20, 2009

தரையை நோக்கி




நான் நேர்மையானவன் கிடையாது
அப்படி இருக்கவும் என்னால் முடியாது
சிறையில் தவிக்கும் மூர்க்கமான ஆன்மா
நான் இப்போது வெளியில் வர போகிறேன்

இந்த இடத்தில் இனியும் வசிக்க என்னால் முடியாது
கண்ணீர் விடவும் முடியாது
என்னுள் என்னை மறைத்து வாழ என்னால் முடியாது
இப்படியே காலம் முழுவதும் கரைந்து விட முடியாது

என்னுடைய உணர்வுகளை உங்களிடம் காட்டவும்
அல்லது சொல்லவும் என்னால் முடியாது
எனக்கு உன்மைக்கும் போலிக்குமான வித்தியாசம்
தெரிந்தால் மட்டும் போதும்

நான் தொலைந்த இன்னுமொரு ஆன்மா
உங்களிடம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்
நான் உங்களுக்கு கடனாக தெரிந்தால்
உங்களை சுற்றி வருவதை நீங்கள் விரும்புவதில்லை

தரையை நோக்கி வானிலிருந்து விழும்
உயிர் உள்ள உடல் நான்
சிறிய தூரமே உள்ளது விழுவதற்கு
என்னை ஏந்துவதற்க்கு கைகளை
நான் அங்கு எதிர்பார்க்கவில்லை

என்னை பற்றிய கவலை
யாருக்கும் இங்கு இல்லை
என் நலம் கேட்பதற்க்கும்
இங்கு ஒருவரும் இல்லை...

வலி





தாக்க பட்ட பறவை
வானிலிருந்து விழும்
போதும்
உண்மை பொய்யுரைக்கும்
போதும்...

வேகமான அலை கரைக்கு
வரும் போதும்
மழை மேகம் தூராமல்
செல்லும் போதும்...

காதலியின் முதற் பார்வையில்
மறைபடும் போதும்
அவளின் இதயத்தில் கோபம்
தென்படும் போதும்...

கோடையில் சூரியன் ஒளிரும்
போதும்
மாலையில் பௌர்ணமி மேகத்தில்
மறையும் போதும்...

பசித்தவனுக்கு கடைசி வாயும்
மரிப்பவனுக்கு கடைசி இரவும்
உறங்காத இரவில் அழகான மடியும்
கலங்காத என்னில் இதெல்லாம்
நிச்சயம் வலியே...