Thursday, November 19, 2009

என்னுள்



அமைதி என் அறை வழியே நகர்ந்து
என்னை அங்கேயே நிலைக்க செய்கிறது
முன்னும் பின்னுமாய் அலறல் ஒலித்தே
அந்த அறைக்குள் தாவிக்கொண்டே இருந்தது
என்னுடைய முனுமுனுப்பு உங்களுக்கு
கேட்கிறதா என்று தவித்துத்தான் போகிறேன்

என் தலைக்குள் இருக்கும் சிறையிலிருந்து தப்பிக்க
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறேன்
என் சுய நோய்க்குள் நானே சிக்கித்தவிக்கிறேன்
இந்த புவியோடு என்னை இணைக்கும்
அந்த கயிற்றை தேடுகிறேன்
இந்த அண்டம் இன்னும் பழுப்புநிற கார் மேகமாய்
இன்னும் மங்கலாய் ஒரு புள்ளியும் தெரியாமல்

இந்த மனிதநேயம் எங்கு சென்றது
நான் ஏன் அதை பின் தொடரவில்லை

என்னுள் இருக்கும் மிருகத்திடமே
இறையாகிறேன்

நீ என்னுடைய படைப்பு
கொடும் மூர்க்கமான படைப்பு
என்னுடைய அங்கம்
நீ என் இதயத்தில்
மெல்லமாய் துலையிட்டு நுழைந்துவிட்டாய்
இப்பொது என்னுள் நீ
தூய்மையற்றவனாய் நான்

உன் வார்த்தைகள் என்னை
பிணங்களின் மீதியை தின்னும் வல்லூராய் மாற்றியது
உன் கரும் கண்களின் சந்திப்பில்
மீண்டும் மீண்டும் மரிப்பதற்காகவே
நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
நீ என்னிடமிருந்து மிக சிறந்த ஒன்றை
உனக்காக எடுத்துக்கொண்டாய்

நீ என் இதயத்தை எடுத்துக்கொண்டாய்
அதை திருப்பிக்கொடு

என் நுண்ணிய உயிரணுக்களையும்
சேகரிக்கிறேன் அவைகளை அந்த பறவையின்
காலில் கட்டிவிடபோகிறேன்
எனதான்மா சொர்க்கத்தை அடைய அதுவே
சிறந்த வழி
இதிலிருந்து மீட்சி எனக்கு கிடையாது
எனக்கான இந்த வாழ்வு விதிவிலக்கல்ல
நான் இதழ்களற்ற ரோஜா
கொடும்மிருகம்


என்னுடைய சாம்பல் என்னை சுற்றியே
நான் மறக்கப்பட்டவனாய்
உங்களிடமிருந்து தொலைந்தவனாய்...

Sunday, November 15, 2009

மூர்க்கமான சூழ்ச்சி




குழப்பமான சூழ்ச்சியை உற்றுப்பார்
வானில் அவைகளை பார்
பார்க்கமுடிகிறதா
மேகங்கள் எப்படி அழுகிறது என்று பார்
அவைகளின் வலியையும் தனிமையும்
உன்னால் உணரமுடிகிறதா
அவைகளின் தனிமையை
பகிர்ந்து கொள்

கணிக்க முடியாத மூர்க்கமான சூழ்ச்சி
யாரையும் விட்டுவைக்காது
அதை கடந்து செல்வது கடினம்

அது மழையாய் தூறி வெள்ளமாய்
இந்த அண்டத்தை முழுமையாய்
நனைத்தே எங்கும் பரவி
சூழ்ச்சியின் மழை பிரமாண்ட மிருகமாய்
மறைந்த கரும் நிலத்தையும்
துறத்தி வேட்டையாடும்

மூர்க்கமாய் உழுத செந்நிற ரோஜா செடியும்
படர்ந்தகொடியும் வானை முட்டியே

அந்த செந்நிற ரோஜாவை பார்
குருதியின் தூரலில் குளிப்பதை
அவை வேகமாய் மலர்வதை பார்
உனக்கது தீர்ப்பிடுவதைப்பார்

அந்த கொடியால் நறுமனத்தோடு
அழகாய் நெய்யப்பட்ட
சூழ்ச்சிமிருகத்தின் பிரமாண்ட கூடு

அந்த மிருகத்தின் பற்கள் கூர்மையாய்
உன் தசைகளை கிழித்து இழுப்பதற்க்கு
உன் தேகம் எங்கும் வலியை நிரப்பும்
உன் கைகளை அது உடைத்து முறிக்கும்
உன் குருதியினை உறையவிட்டு செல்லும்
உன் வாழ்வை அது ஆதரமற்றதாய் மாற்றும்
உன் அடையாளங்களை அது அழிக்கும்

பயத்தின் கூட்டில் வசிக்காதே
சுதந்திரமாய் நட

வாழ்வை விட்டுக்கொடு மரித்துவிடு
மரணம் உனக்கு நண்பன்
அதனிடம் வெட்கப்படாதே
அண்டம் ஒலிக்க கூச்சலிடு
உன் கடைசி கண்ணீர் முடியும்வரை அழு
கடைசியாய் அதனிடம் கேள் ஏன் என்று

இறுதியாய் நீ அழுகியே மீண்டும் மண்ணுக்கே
அதுவும் தற்காலிக வசிப்பிடமாய்

வாழ்க்கையை சூழ்ச்சியை
அந்த பூமிக்கும் அடியிலிருந்து உற்றுப்பார்
அந்த ரோஜாக்களுக்கும் கொடிகளுக்கும் உரமாகு
அவைகள் உன்னை காப்பாற்றினால் காப்பாற்றும்
தற்காலிக மரணத்தில் நீ
இந்த உலக தாயின் அடிமடியில்...

Sunday, November 8, 2009

சொர்க்கத்தின் தோட்டத்திலிருந்து வீழ்ந்தவள்




ஒரு அடர் இருள்

நான் குளம் ஒன்றை கடக்கிறேன்
அதில் தனிமையான நிலவொளியின்
ரீங்கார நடனம்

நீர் தேக்கம் நிலவொளியை குளிர் நடுக்கமுர
அவை வலைந்தும் நெலிந்தும்

அப்போது
தூரத்தில் ஒரு தனியான அடரொளி,
மெல்ல மங்கியதாய் இருளை கவ்வியே

ஒளியை நோக்கியே நான் பயணிக்கிறேன்

தேவதைகளின் கல்லறையில்
நான் நடந்து செல்கிறேன்

ஓர் அழகான தேவதை அழுதுகொண்டு

அவளுடைய இறக்கைகள் உடைந்தும்
கிழிந்தும் காயங்களுடன்
அழுவதற்க்கும் வலுவிழந்தவளாய்

அவள் அழகில் இந்த உலகம் நிச்சயம் மயங்கும்

சொர்க்கத்தின் தோட்டத்திலிருந்து வீழ்ந்தவளாய்.

அவளுடைய ஆன்மா துளி கண்ணீருடன்
அங்கு அவளை கான இயலாதவளாய் தொலைந்தவளாய்
சிதைந்த தேகத்தை வீழ்ந்த தேகத்தை
பாரமாய் நினைத்து
ஒரு அச்சத்துடன் விட்டு சீறிப்பாய தயாராய்

சில்லென வீசும் காற்றோடு கலக்க தயாராய்
அவள் படுத்திருந்த சலவைகல்லின் வெப்பம்
அவள் மரணத்தை சற்று தாமதிக்க

அவளுக்கு உதவ நான் முயன்று தோற்கிறேன்
என்னுடைய தாமதமான பயணம்
அவளுடைய வேகமான மரணத்தை
மீட்க முயலாது வெட்கி குனிகிறேன்

குருதியின் குளத்தில் என் கால்களை நனைக்க செய்த
அவளுக்கு காலம் வெண்சலவைகல்லில் மரண நாட்களை
குறித்துவைத்து என்னை சீண்டியது

ஒரு கனமும் அசைவின்றி
தன் கண்களால் என்னை பார்க்கிறாள்

அவள் இதயம் அழும் ஓசை
மெல்ல என் செவிகளுக்குள் ஒலிக்க துவங்கியது

செங்குருதியின் குளத்தில் வெண்தாமரையாய் அவள்
மிதந்து மௌனமாய்.
நுட்பமான மென்பொருளாய்
கூர்மையான கண்களோடு அவள் வின்னை நோக்கி.

என் கண்கள் நனைந்து
குரூரமாய் என் நாபிஉடைய
என் குரல் அவள் பிரபஞ்சத்தை அடைய கத்தினேன்

அடுத்து யார், நீதான் கடவுளே,
இந்த குளம் உன்னையும்
உன் பாதங்களையும் நனைக்கும்.
இந்த குருதியின் வாசம்
உன் இந்த அண்டம் எங்கும் வீசும்
சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரையும்
இது சென்றடையும்

மௌனமாய் அவளை
என் கைகளில் தூக்கி முத்தமிட்டு,
அன்பாய் நெருக்கமாய் அனைத்து
என் உடல் வெப்பம் அவள் மரண நடுக்கத்தை
குளிர்காய செய்து
அவள் காதுகளின் ஓரமாய்
மெல்லிய குரலில்
இந்த மூர்கமான கொலைக்காக
அவன் விரைவில் பதில் சொல்லுவான் பயம் வேண்டாம் அன்பே
என்று சொன்னபோது...

சிறைக்குள்ளிருந்து விடுவியுங்கள்



என் கூர்மையான
கத்திகளே என்னை
காதலியுங்கள்

என் தோலினை
கூறுபோட்டு அண்டம் ஒலிக்க
என்னை கூச்சலிட செய்யுங்கள்

ஆழமாய் பாய்ந்து
என்னை ஓலமிட்டு
விம்மி அழச்செய்யுங்கள்

என் தசைகளை
அறுத்து குருதியினை
வாரி இறைத்திடுங்கள்

இந்த பிரபஞ்ச சிறைக்குள்ளிருந்து
என்னை விடுவியுங்கள்...

பிரபஞ்சம் நோக்கி சாம்பளாய்



சில வார்த்தைகளில்
என் இதயம் கிழிக்கப்பட்டது
என் வலிகளில் இருந்து
தனிமையே பிறந்தது

பொய்களுக்கு பின்னிருந்து
என் வாழ்க்கை எட்டிப்பார்கிறது
கனவுகள் சிதைந்தும் சிதைத்தும்
நம்பிக்கை கண்களிழந்து

அன்பு மங்கியதாய்
சிதையெரிக்கப்பட்டு
எப்போதும் கானாத
பிரபஞ்சம் நோக்கி சாம்பளாய்

எது முன்பு அன்போ
அது இப்போது சாம்பளாய் காற்றில்
அந்த பொய்கள்
என் கண்களின் முன்னே

தீய்ந்த தசைகளுடன்
பொய்களின் விதைகளுக்கு
நீரூற்றியே காற்றில் கலந்து
கிழிப்பதற்க்கு இன்னொரு
இதயம் தேடி...

தனிமையான அந்த சாலையில்



என் சுமையான நினைவுகளை
தூக்கி தனிமையான கால்கள்
நீண்ட அந்த சாலையில்

யாருமற்று தூரத்து நீர்தேக்கமாய்
சாலையில்
புழுதியின் சுவாசம்
முதல் மழைதுளியை
நினைவுபடுத்தி
தனிமையான அந்த சாலையில்

எதற்காகவும் வருந்தாதவனாய்
இந்த கொடூர தேசத்து பிடியிலிருந்து
எங்கு அன்பு விதைக்கப்பட்டிருக்கிறதோ
அங்கு செல்ல
நான் அந்த சாலையில்

சுமையின் பாரம் என் எலும்புகளை
நொறுக்கி
ஒவ்வொரு நாளும் களைப்பாய்
நிற்கிறேன் சுமையுடன்
நான் அந்த சாலையில்

உன் செவி இந்த பூமியின்
சுழற்ச்சியில் இருந்தால்
உன்னோடு
என்னை அழைத்து செல்
எங்கே விதி எழுதப்படாதோ அங்கே...

Monday, November 2, 2009

உன்னை மறப்பது



உன்னை மறப்பது
என் வீட்டு கொல்லையில் எரியும்
விளக்கை அணைக்க மறந்தது போல
விடிந்தும் எரிந்தே கிடக்கும்

மீண்டும் விளக்கே
நினைவு படுத்தும்
எரிந்து கிடப்பதை...