Sunday, November 8, 2009

பிரபஞ்சம் நோக்கி சாம்பலாய்



சில வார்த்தைகளில்
என் இதயம் கிழிக்கப்பட்டது
என் வலிகளில் இருந்து
தனிமையே பிறந்தது

பொய்களுக்கு பின்னிருந்து
என் வாழ்க்கை எட்டிப்பார்கிறது
கனவுகள் சிதைந்தும் சிதைத்தும்
நம்பிக்கை கண்களிழந்து

அன்பு மங்கியதாய்
சிதையெரிக்கப்பட்டு
எப்போதும் காணாத
பிரபஞ்சம் நோக்கி சாம்பலாய்

எது முன்பு அன்போ
அது இப்போது சாம்பலாய் காற்றில்
அந்த பொய்கள்
என் கண்களின் முன்னே

தீய்ந்த தசைகளுடன்
பொய்களின் விதைகளுக்கு
நீரூற்றியே காற்றில் கலந்து
கிழிப்பதற்க்கு இன்னொரு
இதயம் தேடி...

No comments:

Post a Comment