Tuesday, January 26, 2010

அவளொரு பட்டாம்பூச்சி...




ஒரு பட்டாம்பூச்சி என் கண்முன்னே
சரியான பாதையவளுக்கு தெரிந்திருந்தது
அவள் இங்கும் அங்கும் சிறகடிகிறாள்
என் விரல்களில் தானாய் வந்தமர்கிறாள்

அவள் சிறகுகளில் படிந்த வண்ணமாய்
சூரியனின் ஒளி ஓவியமாய்
நிச்சயமாய் சொல்லுகிறேன்
அவள் பாடுவதை நான் கேட்கிறேன்

அவள் வண்ணம் ஊதாவும் வெளிர்சிவப்பும்
அவளை பார்த்த கணத்தில்
என்னுள்ளிருந்த வெறுமை மூழ்குவதை
நான் உணர்கிறேன்

என் இதயத்தின் ஈரம் உருக துவங்கியது
வெப்பம் அதற்கு மாற்றாக
இதற்கு முன் இது எனக்கு நேர்ந்ததில்லை

அவள் கடைசி பாடலை என் காதில் பாடி
உயர சிறகடித்தாள் என் மனதில்
அவளை இழந்தாள் நான் இறப்பேன்


திடீரென அவள் குரல் தெளிவாய்
என்னை உன்னால் இழக்க முடியாது
உன் அருகில் நான் எப்போதும் என்றாள்

நான் என் வீட்டை தோட்டமாய் மாற்றினேன்
மலர்களை நிரப்பினேன்
அவள் எப்போதும் பறந்தே என்னை சுற்ற

தினமும் அவளை பார்த்தே கிடக்கிறேன்
இப்போது எனக்கும் தெரிகிறது
சரியான பாதை...

Thursday, January 21, 2010

காலம்...





வாடிய ரோஜாக்களை அந்த பூங்கொத்தில் பார்த்த போது
நேரம் பாய்ச்சலாய் ஓடிகொண்டிருப்பதை நினைவுபடுத்தியது,
ரோஜாக்கள் வெகுநேரம் மலர்ந்திருக்காது என்பதை
உணர்ந்து கொண்டேன் அது என் வாழ்க்கையை நினைவுபடுத்தியது.

வாழ்க்கையை எப்படி பார்க்கிறேன் என்பதை நினைத்து பார்க்கிறேன்
காலத்தை குறித்தும் அதன் வேகம் குறித்தும் யோசித்து கொண்டேயிருக்கிறேன்
நான் இன்னமும் அதன் சுழற்சியில் வெகு தூரம் தாமதித்தே நடந்து வருகிறேன்.

கதிரவனின் உதவியால் மொட்டுகள் மலர்ந்து
ரோஜாவின் நறுமணம் மிக வீர்யமானதாக வீசிகொண்டு..
அந்த இதழ்கள் புதிதாய் மலர்ந்த போது யாரவது பார்த்தீர்களா ?
என்ன நேர்ந்திருக்கும் யாரும் அதை இதுவரை முகராமலிருந்திருந்தால்.

என் வாழ்க்கை எனக்கு புரிந்திருக்கும் நேரத்தில் நிறைய ரோஜாக்கள் மடிந்திருக்கும்
மற்றவை மலரவிருக்கும் மீண்டும் நான் சென்றிருப்பேன்
அது வரை நான் எத்தனை இழந்திருப்பேன்.

ஆம் உண்மைதான் மலர்ந்த தூய ரோஜாக்கள் குறுகிய காலமே இங்கு வசிக்கிறது
ஆம் உண்மைதான் என் வாழ்க்கையும் அப்படித்தான்
நான் போராடித்தான் பார்க்கிறேன் என் வாழ்வின் சாரமறிய
ஆனால் இடையூறுகள் அவை நேராமல் தடுக்கின்றன.

நேரம் நான் செலவு செய்ததைவிட தொலைத்ததே அதிகம்
அதை எனக்கும் என் நண்பருக்கும்
என் குடும்பத்திற்கும் பகிர்ந்திருக்கலாம்
ஆனால் தொலைத்துவிட்டேன்
அன்பான பரிசை இழந்துவிட்டேன் அதை விற்கும் பொருளாய் பார்த்துவிட்டேன்.

இன்று அந்த ரோஜாக்களை பார்த்தது முதல்
காலம் அதன் வேகத்தை கூட்டி முன்னேறி செல்வதை உணர்கிறேன்
இயந்திர நகர்தலே நொடிகளாகவும் மணிகளாகவும்
தவிர்க்கமுடியாத அதன் சுழற்சி ஒரு சாண் முட்களே தீர்மானிக்கிறதோ.

நிறுத்தமுடியாத அந்த நகர்தலும் யாருக்காகவும் நிறுத்தாத அதன் மூர்க்கமும்
வேகமாக தன் செயல் நிகரற்றது என்ற திமிருடன்
முன்னோக்கி ஏலனமாய் சிரித்தே நகர்ந்தது
காலம் என் வாழ்க்கையை இறுக பிடித்துகொண்டது.
ஆனால் அந்த கடிகாரத்தை நிறுத்திவிட்டேன்
எனக்கு என்ன மீதமுள்ளது என்பதை நினைத்துப்பார்க்க...

காலம் நமக்கு பரிசு அது விற்பனைக்கு அல்ல
அது நம்மால் கட்டுபடுத்தகூடிய ஒன்று
நான் முன்னேற அதை துரத்தி பிடிக்க போகிறேன்
அதற்கான மரியாதையை வழங்க போகிறேன்
அதனோடு கைகோர்த்து நடக்க போகிறேன் அதன் பிள்ளையாய்.


பாட்டியின் இறுதி மரியாதையில் அவள் அருகில் அமர்ந்த நேரத்தில் ரோஜா என்னை மாற்றியது


என்னை போல் காலத்தை உதாசீனம் செய்தவர்களுக்கு,
காலம் உங்களுக்கும் ஒரு ரோஜாவை பரிசளிக்கும்...

Monday, January 18, 2010

மாய ஊழியில் நான்



முடிவில்லா என் கனவுக்குள்
நான் விழித்தே கிடக்கிறேன்
என் நினைவுகள் விரிவடைய
காலம் என்னை பார்த்து
ஏலனம் செய்து கொண்டேயிருக்கிறது
வெறுமையான இருளில்
என் சொந்த நினைவுகளையும்
தேடி தவிக்கிறேன்
மாயை என்னும் ஊழியில்
எது போலியோ அது கத்தி
கூச்சலிடுகிறது
எனக்காக யாரும் கேட்காத
இடத்தில் அழுதுகொண்டு நான்...

Tuesday, January 12, 2010

கனவுக்குள் தொலைந்த தேவதை



என் இரவுகளில் உன் நினைவுகள்
உன்னோடு என் அந்நாட்களை
குறுந்தகடாய் சுழன்று
என்னை பின்னோக்கி சுழட்டியது
உன் கண்கள்
உன் சிரிப்பு
உன் பேச்சு
அனைத்தும் என் கண்களை
ஈரமாக்கி நகர்ந்தது

ஒரு முணுமுணுப்பு
என் காதுகளில் யாரோ என் பெயரை
ரகசியமாய் அழைப்பது எனக்கு கேட்டது
உற்று கேட்கிறேன்
அது உன்னுடைய குரல்
என் அறை முழுக்க அது ஒலிக்க துவங்கியது
அந்த குரலை நோக்கி நான் வெளியே செல்கிறேன்

முழுதாய் வெண்ணிலா
இந்த என் இரவை நிரப்பி
சில்லென தென்றல்
மகிழ்ச்சியில் பாடுவதை போல என்னை வருடி
இந்த அண்டத்தை நிரப்பி
அந்த பாடலுக்கு மலர்களும் கொடிகளும்
அரங்கேற்ற நடனமாடிக்கொண்டு

தவறுதலாய் என் இதயம் துடிப்பதை நிறுத்தியது
நீ என் தோட்டத்திலிருந்ததை கண்டு
என் கனவுகள் நிஜமானது
வெண்ணிலவின் ஒளியில்
கதிரவனாய் உன் முகம் கடன் வாங்கி மின்னியது
நட்சத்திரங்களாய் உன் கண்கள்
என் இந்த காலங்களுக்கான ஆதாரமாய்
உன் உதடுகளில் வழிந்த உன் புன்னகை

என் நுரையீரலின் ஒட்டுமொத்த சுவாசத்தையும் ருசித்த
இந்த பிரபஞ்சத்தின் மிக சிறந்த வாசம் உன் மீது
நான் தேம்பி தேம்பி அழுகிறேன்
உன்னை மீண்டும் அந்த தோட்டத்தில் பார்த்தது முதல்
அப்படியே இந்த சுழற்சி நிற்க ஆசை
இந்த கணம் நகராமலிருக்க

என் பெயரை உச்சரித்து
உன் கரங்களை அகல விரித்தாய்
என் செயல்பாடுகள் நின்றன
உன் கரங்களை பற்ற பயம்
என் கரங்களுக்கு
உன்னை மீண்டும் இழப்பதற்க்கு
அவை தயாராயில்லை
இருந்தும் உன்னை நோக்கி நான்
மெல்ல பயணிக்க
இமைகளுக்குள் என் கண்கள்
போராடிதவிப்பதை பொறுக்காத என் நண்பன்
தட்டியெழுப்பிய போது
வெளிச்சத்தின் மத்தியில் அறையின் நடுவில்
கலைந்த கனவுகளின் கண்களோடு நான்...