Tuesday, October 20, 2009

வலி





தாக்க பட்ட பறவை
வானிலிருந்து விழும்
போதும்
உண்மை பொய்யுரைக்கும்
போதும்...

வேகமான அலை கரைக்கு
வரும் போதும்
மழை மேகம் தூராமல்
செல்லும் போதும்...

காதலியின் முதற் பார்வையில்
மறைபடும் போதும்
அவளின் இதயத்தில் கோபம்
தென்படும் போதும்...

கோடையில் சூரியன் ஒளிரும்
போதும்
மாலையில் பௌர்ணமி மேகத்தில்
மறையும் போதும்...

பசித்தவனுக்கு கடைசி வாயும்
மரிப்பவனுக்கு கடைசி இரவும்
உறங்காத இரவில் அழகான மடியும்
கலங்காத என்னில் இதெல்லாம்
நிச்சயம் வலியே...

No comments:

Post a Comment