Friday, March 19, 2010

எனக்கான நீ




எல்லாம் நிறைவேறிற்று
ஆனால் இன்னமும் வலி இதயத்தில்
உள்ளே வாழ்ந்து கொண்டேயிருக்கிறது

என்னை விடுத்து
எங்கே உலா சென்றாய்

எனக்கு நீ இன்றே வேண்டும்
என் தலையணை கண்ணீரால்
ஈரமாய்
நீ எங்கே சென்றாலும்
அது நதியாய்
உன் பெருங்கடலை வந்தடையும்

என் தொலைந்த வார்த்தைகள்
உன் இதயத்தினுள் இருக்கிறதா
தேடிப்பார்
நான் தனிமையில் உன் இசையில்
தொலைந்தவனாய்
நீ மீண்டும் வா
உனக்கு தெரியாதா என்னை அணைத்து
காப்பதற்கும்
எனக்கு முத்தமிடுவதற்கும்
தூங்க வைப்பதற்கும்
இந்த ஊழியில் நீ மட்டுமே என்று

நான் உன்னோடிருக்கிறேன்
உன் ஒவ்வொரு செயலிலும் நான்
நீயின்றி வெறுமையை பார்க்கிறேன்
அந்த வானத்தில்
எனக்கான மின்னும் நட்சத்திரம் நீ
உன்னை பார்த்து உறங்க நான்
எங்கே நீ...