Tuesday, October 20, 2009

தரையை நோக்கி




நான் நேர்மையானவன் கிடையாது
அப்படி இருக்கவும் என்னால் முடியாது
சிறையில் தவிக்கும் மூர்க்கமான ஆன்மா
நான் இப்போது வெளியில் வர போகிறேன்

இந்த இடத்தில் இனியும் வசிக்க என்னால் முடியாது
கண்ணீர் விடவும் முடியாது
என்னுள் என்னை மறைத்து வாழ என்னால் முடியாது
இப்படியே காலம் முழுவதும் கரைந்து விட முடியாது

என்னுடைய உணர்வுகளை உங்களிடம் காட்டவும்
அல்லது சொல்லவும் என்னால் முடியாது
எனக்கு உன்மைக்கும் போலிக்குமான வித்தியாசம்
தெரிந்தால் மட்டும் போதும்

நான் தொலைந்த இன்னுமொரு ஆன்மா
உங்களிடம் கிடைப்பதற்காக காத்திருக்கிறேன்
நான் உங்களுக்கு கடனாக தெரிந்தால்
உங்களை சுற்றி வருவதை நீங்கள் விரும்புவதில்லை

தரையை நோக்கி வானிலிருந்து விழும்
உயிர் உள்ள உடல் நான்
சிறிய தூரமே உள்ளது விழுவதற்கு
என்னை ஏந்துவதற்க்கு கைகளை
நான் அங்கு எதிர்பார்க்கவில்லை

என்னை பற்றிய கவலை
யாருக்கும் இங்கு இல்லை
என் நலம் கேட்பதற்க்கும்
இங்கு ஒருவரும் இல்லை...

1 comment:

  1. கலக்குறீங்க பால்..பாராட்டுக்கள்

    ReplyDelete