Saturday, October 24, 2009

நான் நானாய்




மெல்லிய தென்றலாய் அந்த மரத்தின்
கிளைகளின் இடைவெளியில் நுழைந்து
தேனீக்களின் இறக்கையாய் வேகமாய் சுற்றி
வயல்வெளி பூக்களாய் விதைக்காமல் வளர்ந்திடுவேன்
ஆனால் ஆழ்கடலின் அமைதியாய் இதை நிகழ்த்திடுவேன்

என்னுடைய சிரிப்பு சற்று பிரகாசமாய்
அன்பு சரியான அளவாய் இருக்கும்
என்னுடைய இந்த பயணம் குறித்து
நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
அழுகிய திராட்சையின் வாடை என் வாழ்வில் வீசிய போதும்

உங்களுக்கான சராசரி ஆண் நான் கிடையாது
ஆடம்பரம் எனக்கு தெரியாது
அன்பும் சுயமரியாதையுமே என்னுடைய பேராசை
உன்மையாய் எப்பொழுதும் நடந்திடுவேன்

நான் நானாகவே இருக்கிறேன்
இளமையாய் கருப்பாய் அழகாய்
என் திறமையைய் முழுமையாய் காட்டுவேன்
என்னுடைய இயல்பை என்னால் மாற்ற இயலாது
அதற்காக நான் நானாய்...

No comments:

Post a Comment