Wednesday, February 9, 2011

கைதியாய்


நான் பார்ப்பதெல்லாம்
சிவப்பு

நான் கேட்பதெல்லாம்
அலறல்

நான் உணர்வதெல்லாம்
ஈரம்

நான் நினைப்பதெல்லாம்
மரணம்

நான் ஏங்குவதெல்லாம்
சுதந்திரம் . . .