Saturday, October 24, 2009

அன்பு மட்டுமே அனாதையாய்




ஒரு பிடி சோறும்
சிறு துளி நீரும்
கிடைக்காத என் தேசம்
விலைக்கு வாங்க
அன்பு மட்டுமே பிரம்மாண்டமாய்

தோலினை ஆடையாய்
தோல்வியை தோரணமாய்
ஏங்கிய விழிகளை
முதியோர் என கூறிடும்
அன்பு மட்டுமே முதுமையாய்

தரும் கைகளின்றி
பெரும் கைகள் இன்று
பெருகி பெருகி
ஏந்திய தேசமாய் கையேந்திய தேசமாய்
அன்பு மட்டுமே அங்குமிங்குமாய்

வீட்டிற்க்குள் கடல் வந்தாலும்
வீனர் நெஞ்சுக்குள் வந்தாலும்
அலை அலையாய்
சிலை மனதாய் சிற்பமாய்
அன்பு மட்டுமே அனாதையாய்...

No comments:

Post a Comment