Saturday, June 18, 2011

அன்பு மரணம்...



என்ன செய்வாய் ?
உன் ஊரின் மேல் ஏவுகணைகள் வீசப்பட்டால்  
கூரைகள் தரையில் பதுங்கி கிடந்தால் 
நீ தனிமையில் குளிரில் நடுங்கினால்
உன் தெருவை தேடினால்
உன் தந்தையும் தாயும் கொல்லப்பட்டால்
அனைவரையும் தொலைத்துவிட்டால்
நீ மட்டுமே அனைத்திற்கும் சாட்சியாய் மாறிவிட்டால்

நீ ஓடவேண்டும்  எங்கு ஓடுவாய் ?
நீ மரித்தால் யாருக்கு தெரியும் ?
சில கணங்களே உள்ளது .
உன் கைகளும் கண்களும் கட்டப்பட்டு !

நீ என்னை சந்திக்க
உன் தலைக்கு பின் தோட்டாக்கள்
பாயத்துடிக்கும் துப்பாக்கிகளுக்கு
உள்ளிருக்கும் 

உன் அன்பு மரணம் ... 

Friday, June 10, 2011

மேசையின் மீது என் காதல்




என் கண்களின் வழியாக
வழிந்து கொண்டிருப்பது
வார்த்தைகளைவிட மேலானவை
அவை என்
இதயம் பேசும் மொழி
என் உணர்வுகள்
என் ஆழ்மனதின் சிறுகதை

உனக்காகவே அதை வெளிகொணர்கிறேன்
இந்த மேசையின் மீது
வைக்கப்பட்டிருக்கும்
இதயமும்
ஆன்மாவும்
உனக்காக காத்துகொண்டிருப்பது
புரிகிறதா

என்னை ஊமையென  
நினைத்துவிடாதே
நான் உள்ளே
மரித்துக்கொண்டிருக்கிறேன்
இன்னமும்  
உனக்கு புரியவில்லையா
ஆம்
மௌனம் இதுவரை யாருக்கும்
புரியாத காதலின் மொழி . . .