Tuesday, January 12, 2010

கனவுக்குள் தொலைந்த தேவதை



என் இரவுகளில் உன் நினைவுகள்
உன்னோடு என் அந்நாட்களை
குறுந்தகடாய் சுழன்று
என்னை பின்னோக்கி சுழட்டியது
உன் கண்கள்
உன் சிரிப்பு
உன் பேச்சு
அனைத்தும் என் கண்களை
ஈரமாக்கி நகர்ந்தது

ஒரு முணுமுணுப்பு
என் காதுகளில் யாரோ என் பெயரை
ரகசியமாய் அழைப்பது எனக்கு கேட்டது
உற்று கேட்கிறேன்
அது உன்னுடைய குரல்
என் அறை முழுக்க அது ஒலிக்க துவங்கியது
அந்த குரலை நோக்கி நான் வெளியே செல்கிறேன்

முழுதாய் வெண்ணிலா
இந்த என் இரவை நிரப்பி
சில்லென தென்றல்
மகிழ்ச்சியில் பாடுவதை போல என்னை வருடி
இந்த அண்டத்தை நிரப்பி
அந்த பாடலுக்கு மலர்களும் கொடிகளும்
அரங்கேற்ற நடனமாடிக்கொண்டு

தவறுதலாய் என் இதயம் துடிப்பதை நிறுத்தியது
நீ என் தோட்டத்திலிருந்ததை கண்டு
என் கனவுகள் நிஜமானது
வெண்ணிலவின் ஒளியில்
கதிரவனாய் உன் முகம் கடன் வாங்கி மின்னியது
நட்சத்திரங்களாய் உன் கண்கள்
என் இந்த காலங்களுக்கான ஆதாரமாய்
உன் உதடுகளில் வழிந்த உன் புன்னகை

என் நுரையீரலின் ஒட்டுமொத்த சுவாசத்தையும் ருசித்த
இந்த பிரபஞ்சத்தின் மிக சிறந்த வாசம் உன் மீது
நான் தேம்பி தேம்பி அழுகிறேன்
உன்னை மீண்டும் அந்த தோட்டத்தில் பார்த்தது முதல்
அப்படியே இந்த சுழற்சி நிற்க ஆசை
இந்த கணம் நகராமலிருக்க

என் பெயரை உச்சரித்து
உன் கரங்களை அகல விரித்தாய்
என் செயல்பாடுகள் நின்றன
உன் கரங்களை பற்ற பயம்
என் கரங்களுக்கு
உன்னை மீண்டும் இழப்பதற்க்கு
அவை தயாராயில்லை
இருந்தும் உன்னை நோக்கி நான்
மெல்ல பயணிக்க
இமைகளுக்குள் என் கண்கள்
போராடிதவிப்பதை பொறுக்காத என் நண்பன்
தட்டியெழுப்பிய போது
வெளிச்சத்தின் மத்தியில் அறையின் நடுவில்
கலைந்த கனவுகளின் கண்களோடு நான்...

1 comment: