Thursday, January 21, 2010

காலம்...





வாடிய ரோஜாக்களை அந்த பூங்கொத்தில் பார்த்த போது
நேரம் பாய்ச்சலாய் ஓடிகொண்டிருப்பதை நினைவுபடுத்தியது,
ரோஜாக்கள் வெகுநேரம் மலர்ந்திருக்காது என்பதை
உணர்ந்து கொண்டேன் அது என் வாழ்க்கையை நினைவுபடுத்தியது.

வாழ்க்கையை எப்படி பார்க்கிறேன் என்பதை நினைத்து பார்க்கிறேன்
காலத்தை குறித்தும் அதன் வேகம் குறித்தும் யோசித்து கொண்டேயிருக்கிறேன்
நான் இன்னமும் அதன் சுழற்சியில் வெகு தூரம் தாமதித்தே நடந்து வருகிறேன்.

கதிரவனின் உதவியால் மொட்டுகள் மலர்ந்து
ரோஜாவின் நறுமணம் மிக வீர்யமானதாக வீசிகொண்டு..
அந்த இதழ்கள் புதிதாய் மலர்ந்த போது யாரவது பார்த்தீர்களா ?
என்ன நேர்ந்திருக்கும் யாரும் அதை இதுவரை முகராமலிருந்திருந்தால்.

என் வாழ்க்கை எனக்கு புரிந்திருக்கும் நேரத்தில் நிறைய ரோஜாக்கள் மடிந்திருக்கும்
மற்றவை மலரவிருக்கும் மீண்டும் நான் சென்றிருப்பேன்
அது வரை நான் எத்தனை இழந்திருப்பேன்.

ஆம் உண்மைதான் மலர்ந்த தூய ரோஜாக்கள் குறுகிய காலமே இங்கு வசிக்கிறது
ஆம் உண்மைதான் என் வாழ்க்கையும் அப்படித்தான்
நான் போராடித்தான் பார்க்கிறேன் என் வாழ்வின் சாரமறிய
ஆனால் இடையூறுகள் அவை நேராமல் தடுக்கின்றன.

நேரம் நான் செலவு செய்ததைவிட தொலைத்ததே அதிகம்
அதை எனக்கும் என் நண்பருக்கும்
என் குடும்பத்திற்கும் பகிர்ந்திருக்கலாம்
ஆனால் தொலைத்துவிட்டேன்
அன்பான பரிசை இழந்துவிட்டேன் அதை விற்கும் பொருளாய் பார்த்துவிட்டேன்.

இன்று அந்த ரோஜாக்களை பார்த்தது முதல்
காலம் அதன் வேகத்தை கூட்டி முன்னேறி செல்வதை உணர்கிறேன்
இயந்திர நகர்தலே நொடிகளாகவும் மணிகளாகவும்
தவிர்க்கமுடியாத அதன் சுழற்சி ஒரு சாண் முட்களே தீர்மானிக்கிறதோ.

நிறுத்தமுடியாத அந்த நகர்தலும் யாருக்காகவும் நிறுத்தாத அதன் மூர்க்கமும்
வேகமாக தன் செயல் நிகரற்றது என்ற திமிருடன்
முன்னோக்கி ஏலனமாய் சிரித்தே நகர்ந்தது
காலம் என் வாழ்க்கையை இறுக பிடித்துகொண்டது.
ஆனால் அந்த கடிகாரத்தை நிறுத்திவிட்டேன்
எனக்கு என்ன மீதமுள்ளது என்பதை நினைத்துப்பார்க்க...

காலம் நமக்கு பரிசு அது விற்பனைக்கு அல்ல
அது நம்மால் கட்டுபடுத்தகூடிய ஒன்று
நான் முன்னேற அதை துரத்தி பிடிக்க போகிறேன்
அதற்கான மரியாதையை வழங்க போகிறேன்
அதனோடு கைகோர்த்து நடக்க போகிறேன் அதன் பிள்ளையாய்.


பாட்டியின் இறுதி மரியாதையில் அவள் அருகில் அமர்ந்த நேரத்தில் ரோஜா என்னை மாற்றியது


என்னை போல் காலத்தை உதாசீனம் செய்தவர்களுக்கு,
காலம் உங்களுக்கும் ஒரு ரோஜாவை பரிசளிக்கும்...

No comments:

Post a Comment