Monday, January 18, 2010

மாய ஊழியில் நான்



முடிவில்லா என் கனவுக்குள்
நான் விழித்தே கிடக்கிறேன்
என் நினைவுகள் விரிவடைய
காலம் என்னை பார்த்து
ஏலனம் செய்து கொண்டேயிருக்கிறது
வெறுமையான இருளில்
என் சொந்த நினைவுகளையும்
தேடி தவிக்கிறேன்
மாயை என்னும் ஊழியில்
எது போலியோ அது கத்தி
கூச்சலிடுகிறது
எனக்காக யாரும் கேட்காத
இடத்தில் அழுதுகொண்டு நான்...

No comments:

Post a Comment