Sunday, April 17, 2011

சுயநலமும் புறக்கணிப்பும்



அபரிமிதமான சுயநலம்
இளமையான ஆன்மாவிடமிருந்து
என் இரத்தக்குழாய் வழியாக
எல்லாவற்றையும் மறந்துவிடும் என் வாய் வழியாக
உற்பத்தியாய்க் கொண்டேயிருக்கிறது

எனது வார்த்தைகள்
அலட்சியம் ஊறியதாய்
இந்த நிலம் முழுக்க இறைந்துகிடக்கும்
அவை உறவுகளை விரிசலடைய
செய்து தகர்த்துவிடும்
அப்போதும் மூடிய என் கண்கள்
அவைகளை புறக்கணித்திருக்கும்

அந்த விலகல், காலி தட்டில்
கூர்மையான கத்தியால் தாக்குவது போல்
என் காதுகளில் முணுமுணுப்பால் தாக்கியது
ஆனால் இன்னமும்
என் தலை வெட்கிச்சாயவில்லை. . .

2 comments:

  1. கவிதை அருமை!!

    நந்தலாலாவுக்கு வருகை தாருங்கள்!!

    ReplyDelete
  2. நன்றி தோழர்! நந்தலால இனைய இதழுக்கு வந்து இயன்ற வரை கவிதைகளை வாசித்தேன் அருமையான படைப்புகள் ! இனி இதழை தொடர்ந்து வாசிப்பேன் . நன்றி

    ReplyDelete