Friday, June 10, 2011

மேசையின் மீது என் காதல்




என் கண்களின் வழியாக
வழிந்து கொண்டிருப்பது
வார்த்தைகளைவிட மேலானவை
அவை என்
இதயம் பேசும் மொழி
என் உணர்வுகள்
என் ஆழ்மனதின் சிறுகதை

உனக்காகவே அதை வெளிகொணர்கிறேன்
இந்த மேசையின் மீது
வைக்கப்பட்டிருக்கும்
இதயமும்
ஆன்மாவும்
உனக்காக காத்துகொண்டிருப்பது
புரிகிறதா

என்னை ஊமையென  
நினைத்துவிடாதே
நான் உள்ளே
மரித்துக்கொண்டிருக்கிறேன்
இன்னமும்  
உனக்கு புரியவில்லையா
ஆம்
மௌனம் இதுவரை யாருக்கும்
புரியாத காதலின் மொழி . . .

1 comment:

  1. நீங்க கேமராவில் கவிதை எழுதறவருன்னு தப்பா நினைச்சுட்டேன்!!! அருமைங்க!!!

    ReplyDelete