Saturday, April 9, 2011

தொடர்பற்றவனாய் நான்




நான் கடந்து வருபவர்களை
என்னால் உடனே மறந்துவிட முடிகிறது
எனது எண்ணமும் என் நிழலை போலவே
என்னிடமே சுற்றிதிரிகிறது

நான் சந்திப்பவர் மனதில்
நான் தங்குவது கிடையாது
என்னுள்ளும் நீங்கள் அப்படித்தான்

நீங்கள் என் வாழ்கையில்
வந்து போகும் அந்தணர்களே
நானும் இங்கே அப்படித்தான்

ஓடையில் நீர் தங்கலாம்
அதன் மீன் தங்கலாம்
எட்டிப்பார்க்கும் உன் முகமும்
கடந்து போகும் மேகமும்
அதில் தங்குவது கிடையாது
எல்லாம் சாத்தியங்களே
நதியும் அப்படித்தான்
கடலும் அப்படித்தான்

உறக்கம் வரும் கனவும் வரும்
கனவு வரும் போது நீ உறங்குவது 
நிஜமா உறங்கிப்பார் தெரியும் . . .

No comments:

Post a Comment