Wednesday, May 26, 2010

விழிக்காத நாட்கள்



உறக்கம் என்னை மகிழ்ச்சியில் வைத்திருக்கிறது!
விழித்திருக்கும் நேரங்களில் மரணம் சிறப்பாகவும்
பத்திரமாகவும், மிக அமைதியாகவும் இருக்கிறது!
என் கண்கள் மூடியிருக்கும் வேலையில்
கனவுகள் என்னை தூக்கி சுமக்கிறது!
அமைதியை அறிமுகம் செய்கிறது!
மகிழ்ச்சியையும் அன்பையும் தழுவ செய்கிறது!
சில நேரங்களே இருந்தாலும், என் கனவுகள்
எனக்கு பலம் சேர்க்கிறது அன்றைகளுக்கு
என் கனவுகள் பயம் நிறைந்தது, மாயமானது!
ஆனால் அது எனக்கு நிஜ வாழ்வைவிட சிறப்பானது!
கனவில் நண்பர்கள் விட்டு செல்வதில்லை
நேரம் வேகமாகவோ, நிதானமாகவோ போகவில்லை!
என்னை யாரும் வெறுப்பதில்லை, மறப்பதுமில்லை!
எதுவுமே உண்மையில்லை !
இருந்தாலும் மகிழ்ச்சியாயிருக்கிறது
சூரியன் வருகிறான்... நான் விழிக்கிறேன்...
எது உண்மையோ அது நடக்கிறது
வலியிருக்கிறது, சோகமிருக்கிறது !
பயமும், வெறுப்பும் முகம் கழுவுகிறது
ஆதலால் கண்களை திறக்காமலிருக்க
உறக்கம் நீடிக்க வேண்டுகிறேன்!
என் கனவுகள் கலையாமலிருக்க
அன்பு விழித்தேயிருக்கும்...

2 comments:

  1. அன்பு விழித்தேயிருக்கும்...

    ReplyDelete
  2. சூரியன் வருகிறான்... நான் விழிக்கிறேன்...
    எது உண்மையோ அது நடக்கிறது
    வலியிருக்கிறது, சோகமிருக்கிறது !
    பயமும், வெறுப்பும் முகம் கழுவுகிறது
    ஆதலால் கண்களை திறக்காமலிருக்க
    உறக்கம் நீடிக்க வேண்டுகிறேன்!
    என் கனவுகள் கலையாமலிருக்கும்
    அன்பு விழித்தேயிருக்கும்...

    - முற்றிலும் உண்மை

    ReplyDelete