Wednesday, May 5, 2010

நான் காற்றாய் வருவேன்



அந்தரத்தில் சிக்கி தவிக்கிறேன்
கழுமரத்தில் ஏற்றிவிட்டாய் என்னை!
நேசிக்க ஒருவருமில்லை எனக்கு
அண்ணாந்து பார்த்து கூப்பிடவும் இல்லை
என் சிலுவை மிக பாரமானது
சிலுவையின் அடியில் நீ
சிரித்துக்கொண்டு!
தேவதைகள் உன்னை தூக்கிச் சுமக்கலாம்.
என் தேடல் என்னை தூக்கிச் சுமக்கிறது
விரல்களின் விளிம்பில் உன் நினைவுகள்!
இதயத்திடம் கற்றுக்கொண்டேன்
துடிப்பது எப்படி என்று!
விழிகளில் நீர்வழிய நிற்கிறேன்
அதை ருசிப்பதற்கு
காத்துக்கிடக்கிறது என் நிலம்.!
நான் நானாக தான் இருக்கிறேன்!
நீ தான் நானில்லை என்கிறாய்!
நான் ஜன்னல் வழியே
பிரபஞ்ச தேவனை பார்க்க செல்கிறேன்
நீ காற்றுள்ள போதே தூற்றிக்கொள்!
நான் காற்றாய் வருகிறேன்...

1 comment: