Wednesday, July 7, 2010

நான் தனிமையில் அல்ல




இரவு, அது தனிமையில்
தெருக்களும் சந்திப்புகளும் கூட
நான், பயணித்துக்கொண்டு
நான் தனிமையில் அல்ல

வானம், அது தனிமையில்
நிலவை அந்த கடல் விழுங்கிய போது
நான், உன் நிழலினை பிடித்துக்கொண்டு
நான் தனிமையில் அல்ல

பிரபஞ்சம், அது தனிமையில்
உயிரற்ற தசைகளோடு அன்பு மரணிக்கையில்
தனிமையின் துணையோடு நடக்கையில்
நான் மட்டும் தனிமையில் அல்ல...

5 comments:

  1. Ini Naan Thanimayil Alla..........

    ReplyDelete
  2. அருமையான கவிதை நண்பரே...

    ReplyDelete
  3. நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

    ReplyDelete