
எல்லாம் நிறைவேறிற்று
ஆனால் இன்னமும் வலி இதயத்தில்
உள்ளே வாழ்ந்து கொண்டேயிருக்கிறது
என்னை விடுத்து
எங்கே உலா சென்றாய்
எனக்கு நீ இன்றே வேண்டும்
என் தலையணை கண்ணீரால்
ஈரமாய்
நீ எங்கே சென்றாலும்
அது நதியாய்
உன் பெருங்கடலை வந்தடையும்
என் தொலைந்த வார்த்தைகள்
உன் இதயத்தினுள் இருக்கிறதா
தேடிப்பார்
நான் தனிமையில் உன் இசையில்
தொலைந்தவனாய்
நீ மீண்டும் வா
உனக்கு தெரியாதா என்னை அணைத்து
காப்பதற்கும்
எனக்கு முத்தமிடுவதற்கும்
தூங்க வைப்பதற்கும்
இந்த ஊழியில் நீ மட்டுமே என்று
நான் உன்னோடிருக்கிறேன்
உன் ஒவ்வொரு செயலிலும் நான்
நீயின்றி வெறுமையை பார்க்கிறேன்
அந்த வானத்தில்
எனக்கான மின்னும் நட்சத்திரம் நீ
உன்னை பார்த்து உறங்க நான்
எங்கே நீ...